Saturday, April 7, 2007

என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால்

என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்து இருந்தால், இது தான் செய்து இருப்பேன் இந்த நேரத்தில். உலகம் பூரா உள்ள நியுஸ் பேப்பர்களிலும் வெப்சைட்டுகளிலும் "war against terror". இராகில் நடந்தது "war against terrorist" -ஆ. தன் தகப்பனின் தோழ்விக்கு பலி வாங்க இராக் மீது போரை தொடுத்தார் புஷ். Saddam-ஐ கொல்ல இராக் மக்களை ஏன் கொல்கிறார்கள்?

இராகில் நடந்து வரும் குண்டு வெடிப்புகளும் , கொலைகளும் தீவரவாதிகளாலா நடக்கிறது. websites-ஐ பார்த்தாலும் நியுஸ் பேப்பரை பார்த்தாலும் தீவிரவாதிகள் தாக்குதல்...தீவிரவாதத்தின் எதிரொலி என்று........

இராக்கில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகளுக்கும் , கொலைகளுக்கும் யார் காரணம்..புஷ்-யே காரணம். இப்பொழுது நடைபெறும் சம்பவங்கள்...2003 முன்னர் இல்லையே..

Saddam -கொன்னாச்சு ஆட்சியும் கவழ்த்தாச்சு...இன்னும் என்ன வேலை அமெரிக்காவுக்கு.... அடுத்தவன் வீட்டு சொத்துக்கு ஏன் இப்படி நாக்க தொங்க போட்டு கொண்டு அலையனும் ..அமெரிக்காவிடம் இல்லாத பணமா இல்லாத சொத்தா? ஏன் இந்த அற்ப ஆசை குணம்...அரக்க குணம்.

ஒரு உயிர் போனால் கூட ஊர் உலகம் தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா.....இராகில் தினமும் நூற்றுக்கணக்கான பேரு கொல்ல படுகிறார்களே...அது மனிதாப மானமோ இல்லை மனித நேயமாகவோ தெரிய வில்லையா?

எனக்கு என்னொவொ இராகில் நடைபெறும் எல்லாம் தீவிரவாதமாக தெரியவில்லை...தங்களையும், தன் நாட்டையும் ஆக்கிரமிட்து கொண்டு இருக்கும் அமெரிக்காவின் மீது கொண்ட கோப வெறியே என்று தோன்றுகிறது..

இது என்னொமோ அமெரிக்கவாவின் ஒட்டு மத்த முடிவாகவே தெரியவில்லை...தனி பட்ட ஒரு மனிதனின் எண்ணங்களே இங்கு இராகில் பிரதிபலிக்கின்றன.

என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால் அமெரிக்காவின் பொருளாதரத்துக்கு உலகம் பூரா தடை விதிப்பேன்...இந்த உலகம் இன்னும் 20 வருசம் முன்னால் இருந்த நிலமைக்கு போனாலும் சரி பொருளாதரத்தில்!?. இது புஷ்-ஐ அதிபராக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு கொடுக்க படும் தண்டனை மட்டும் அல்ல கை கட்டி காசுக்கு நம் மீதும் பொருளாதர தடை விதித்து விடுவார்களோ என்று பொத்தி கொண்டு தன் வேலையை மட்டும் நல்ல புள்ளையாக பார்க்கும் மற்ற நாடுகளுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன். இன்னொரு தடவை இது போன்ற தனி விருப்பு வெறுப்பு உள்ள மனிதனை அமெரிக்கா மட்டும் இல்லை (இராக்கும் தான்), எந்த நாட்டு மக்களும் அப்படி பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்க கூடாது.

இதனால் ஒரு புதுசாய் ஆக்கிரமிப்பு இல்லதா உலகத்தை படைக்க வழி வகுப்பேன்...எனக்கு இல்லாத இந்த அதிகாரம் இந்த உலகில் இப்போது யாருக்கு இருக்கிறது?