Monday, May 17, 2010

என் தாய்மண் வேசியான கதை

என் தாய்மண் வேசியான கதை

எனது தாய் மண், நான் பிறந்த இடம், நான் வாழும் மாநிலம், என்னையும் என் மக்களையும் காப்பாற்றும் என் நாடு - அன்னிய முதலாளிகளால், என் நாட்டு சில அரசியல்வாதிகளால், சில அதிகாரிகளின் சுயலாபதிற்காக எனது மண் வேசியாக்கபட்டுள்ளது. இந்த வேசி முழுவதுமாக சீரழிந்து கெட்டு , அழிய போகிறாள் எனும் போது என் நெஞ்சு பதபதைக்கிறது. பணத்துக்காக என் தாய்மண் விற்கபடுகிறது. அன்னிய முதலைகள் இங்குள்ள மக்களாலேயே இந்த மண்ணை, இந்த மண்ணின் வளத்தை, இந்த மண்ணின் தூய நிலத்தடி நீரை, இந்த மண்ணின் தூய சுவாசிக்கும் காற்றை, விலன்கினதின், மனித இனத்தின் சுகாதார தன்மையை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் எனும் போதும், என் நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்னிய முதலாளிகளின் நாடுகளில் கை படாத, கால் படாத பிரதேசங்கள் உண்டு. அங்கு இயற்கை வளம், நீர்வளம், தூய காற்று, நல்ல சுற்றுபுற சூழ்நிலை எல்லாமே நன்றாக உள்ளது. ஆனால் என் மண்ணில், குடிக்க நல்ல தண்ணிர் இல்லை. சுவாசிக்க நல்ல காற்று இல்லை, என் சுற்றுபுறம் தூமையாக இல்லை. ஒரு லிட்டர் தண்ணீர் 10 ருபாய் 20 ருபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை. இந்த அநியாயம் அன்னிய நாடுகளில் உண்டா.? அங்கு சமையல் அறையில், குளிக்கும் அறையல், பொது இடங்களில் வரும் தண்ணீர் -எல்லாமே ஒன்று தான். எந்த தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் இங்கு?

பணத்திற்காக - ஆமாம் வேலை இல்லாத இந்த மக்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக, தொழில் வளம் பெருக்குகிறோம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும், இந்த மாநில, மத்திய அரசும், குறைவாக செலாவாகும் என எண்ணும் அன்னிய முதலாளிகளும் எதைப் பற்றியும் கவலை படாமல் பணம் ஒன்றே குறிகோளாக - எனது மண்ணை, எங்களது நிலத்தை மாசுப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

பணத்தை தூக்கிப் போட்டு, எங்களது இயற்கை வளங்களை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை அதற்கு சரியான தீர்வை முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். எங்களது கண் முன்னே , அரசியல் வாதிகளின் கண் முன்னே, இந்த அரசின் கண் முன்னே இந்த தாய்மண்ணை சீரழித்துக்கொண்டு இருகிறார்கள். கேப்பார் யாரும் இல்லை. கேட்டலும் அதை யாரும் பொருபடுத்த வில்லை. வாழ முதன்மையானது குடிநீர். அதுவே மாசு பட்டு கிடக்கிறது. மாசு பட்ட நீரும் கிடப்பதில்லை இப்போது. நாளைய சமுதாயம் நல்ல தண்ணீர் இன்றி தவிக்க போகிறது. காசு இருபவர்கள், தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கி குடிப்பார்கள், குளிப்பார்கள்.

நாளய சமுதாயமே, நாளை, எதிர் காலத்தில், இந்த அரசங்கமோ இல்லை வெளி நாட்டு/அன்னிய நாட்டு முதலாளிகளோ தண்ணிர் விற்க போகிறார்கள் கூவி கூவி. ஒரு லிட்டர் ஒரு ருபாய், ஒரு லிட்டர் பத்து ருபாய் , அம்பது ருபாய், நூறு ருபாய் என்று. இந்த அரசாங்கமும் கடலில் இருந்து தண்ணீர் எடுத்து ஒரு லிட்டர், ஒரு குடம் பத்து ருபாய், இருபது ருபாய் என்று விற்க போகிறது. அதற்க்கும் அதையம் பணம் கொடுத்து வாங்கும் மக்களாக நாம் தள்ள படுவோம்......

அன்னிய நாடுகள் அழகாக, கை படாத கண்ணியா இருக்க வேண்டும். அவர்கள், அவர்களின் நாடுகளின் வளங்கள் குறைய கூடாது, கெடக் கூடாது.

ஆனால் என் நாட்டின், இந்த மண்ணின் வளத்தை கெடுக்கலாம். அழிக்கலாம். என் தாய் மண்ணை கெடுத்து, வேசியாக்கி, சீரழிக்க நினைக்கிறார்கள் - நாளைய தினங்களில் என் தாய் மண்ணின் வளம் முழுவதுமாக - பணதிற்க்கா அழிக்கப்படும். நாம் எல்லோரும் மனதை மூடி, கண்களை திறந்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இருப்போம்......


மன சாட்சியாவது மண்ணாங்கட்டியாவது.....நமக்கு!

Wednesday, April 21, 2010

கிராமத்தில் பிறந்தவன் 7 மாதத்திலா பிறந்தான்?: பாமக எம்எல்ஏ

சென்னை: தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

சட்டசபையில் மக்கள் நல்வாழ்த்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ டாக்டர் காயத்ரி தேவி கூறுகையில்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சைக்கு செல்பவர்களிடம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களின் பரிந்துரை கடிதம் கேட்கிறார்கள். அதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண வியாதிகளுக்கும் அசாதாரண கட்டணம்:

இந்த திட்டத்தில் சில தனியார் மருத்துவமனைகளில் சாதாரண வியாதிகளுக்கும் அசாதாரணமான கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இதற்கு ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்து எந்தெந்த மருத்துவமனைகள், எந்தெந்த வியாதிகளுக்கு எவ்வகை கட்டணம் பெறுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது.

இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் பல தனியார் மருத்துவமனைகளில் முறையாக பயிற்சி பெறாத டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கான செலவு ரூ. 1.50 லட்சம் வந்தால், மீதமுள்ள ரூ. 50,000த்தை செலுத்த பலர் தயாராக உள்ளனர். ஆனால், இதுபோன்ற நிலை ஏற்படும்போது தகுதியில்லை என்று கூறி மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி விடுகின்றன.

பரிசோதனை செய்வதில் ஏற்படும் காலதாமதம், சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு பலர் செல்வதில்லை.

மக்கள் எப்படி வருவார்கள்?:

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட எலக்ட்ரானிக் மைக்ராஸ்கோப் கருவி பழுதுதடைந்துள்ளது. இதுபோன்ற நிலை இருந்தால் அரசு மருத்துவமனைக்கு மக்கள் எப்படி வருவார்கள்?.

எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் 62,000 செவிலியர்கள் தேவை. ஆனால் 20,000 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றும் புரியாத மருத்துவ படிப்புகள்:

மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு தொடர்பில்லாத மருத்துவ உதவியாளர் பயிற்சியை (பிசிஸியன் அசிஸ்டெண்ட் கோர்ஸ்) சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடத்துகிறார்கள். அதேபோல மருத்துவ கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் 6 மாத உதவி செவிலியர் பயிற்சியின் நோக்கம் தான் என்ன? நாடித் துடிப்பை பற்றி அறிந்து கொள்ளக் கூட இந்த 6 மாதம் போதாதே? ஏன் இந்த பயிற்சி இதுபோன்ற ஒன்றும் புரியாத பாடப்பிரிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

பெங்களூரை நம்பியிருப்பது ஏன்?:

திசு சோதனை, நரம்பு நுண் சோதனை போன்ற அதிமுக்கியமான சோதனைகளுக்கு பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையை நம்பியிருப்பது ஏன்?. நிமான்சுக்கு இணையாக ஒரு ஆராய்ச்சி நிலையத்தை தமிழகத்தில் இந்திரா காந்தி பெயரில் உருவாக்க வேண்டும்.

தனியார் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் `சூப்பர் ஸ்பெஷாலிட்டி கேசஸ்' பயிற்சி பெற அனுமதி மறுப்பது ஏன்? அதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளில் பயிற்சி பெற செவிலியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க மறுப்பது வேதனைக்குரியதாகும் என்றார் காயத்ரி தேவி.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் சிகிச்சையா?:

அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் பேசுகையில், தண்ணீரில் கலப்படம், உணவில் கலப்படம், இப்போது மருந்திலும் கலப்படம் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சுகாதாரத் துறையின் நிர்வாக திறமையின்மையே இதற்கு காரணம். இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

(கலைஞர்) காப்பீட்டுத் திட்டமும் சட்டமன்ற கட்டிடம் போல அவசரக் கோலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எத்தனையோ அரசு காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும் போது தனியார் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பது ஒரு சிலர் ஆதாயம் பெறுவதற்காகத் தான்.

71,942 பேருக்கு ரூ.205 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 1.44 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்காக கொடுத்த பிரீமியத் தொகை எவ்வளவு என்பதை மட்டும் ஏன் சொல்லவில்லை?.

காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 4 நபர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒரு முறை காப்பீடு செய்யப்படுகிறது. இதில் 4 வருடங்களில் ஒரு நபர் ரூ.1 லட்சத்துக்கு சிகிச்சை மேற்கொண்டுவிட்டால் மற்ற 3 பேருக்கு திட்ட பலன் கிடைக்காது. அந்த 3 பேர் கதி என்ன?.

இடையில் ஒரு புரோக்கர் ஏன்?:

அதேபோல ஆபரேஷனுக்கு முந்தைய பரிசோதனை, தங்கியிருக்கும் செலவு, தொடர் சிகிச்சை ஆகியவைகளை செலுத்த முடியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆபரேஷன்களுக்கும் இந்த காப்பீட்டுப் பணம் வழங்கப்படுகிறது. அரசு பணத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்க இடையில் ஏன் ஒரு புரோக்கர்? என்றார்.

கிராமத்தில் பிறந்தவன் 7 மாதத்திலா பிறந்தான்?:

பாமக எம்எல்ஏ டாக்டர் நெடுஞ்செழியன் பேசுகையில், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்காக `பேச்சலர் ஆப் ரூரல் மெடிசின் சர்வீஸ்' (பி.ஆர்.எம்.எஸ்.) என்ற மூன்றரை வருட படிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கிராமத்தில் பிறந்தவன் மட்டும் 7 மாதத்திலா பிறந்தான்?. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்

Monday, April 19, 2010

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே.......?

மதுரை: தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!. திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்று தமிழர் களம் அமைப்பாளர் அரிமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மலையாளியாக இருக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ?

முல்லைப் பெரியாறும், ஒகனேக்கல்லும், காவிரியும், பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும்போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா? இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா? அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா?

கடந்த 1956 ல் மொழி வழி மாநிலமாக இந்தியா பிரிக்கப்படும்போது மொழி இன அடிப்படையிலான உரிமைகளுக்கு அது அங்கீகாரம் அளித்தது!

ஆனால், மராட்டிய இன உணர்வுகளும், சீக்கிய இன உணர்வுகளும், கன்னடத், தெலுங்கு, மலையாள மற்றும் பிற இன உணர்வுகளும் உரிமைகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் மதிக்கப்படும்போது தமிழர்களின் உரிமையும் தாகமும் மட்டும் நசுக்கப்படுவது ஏன்?

அந்தந்த மாநிலங்களை அவரவர் ஆளும்போது, தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகவும் வேலியில்லாக் காடாகவும் யார் வேண்டுமானாலும் ஆளலாம், ஆட்டம் போடலாம், ஏறி மேயலாம் என்ற நிலை இருப்பது ஏன்?

வந்தேறிகள் ஆளவும் ஏய்க்கவும அரட்டவும் உருட்டவும் அவர்கள் வைத்திருக்கிற கைத்தடிதான் திராவிடம் என்கிற பொய்ப்பூச்சு!

அடுத்து, பெரியார் என்கிற ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிற பேருரு!

தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்றுதான். தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது. அல்லது ஏறி மேய்கிறார்கள்!

மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் தாய்த் தமிழகம் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பத்தரைக் கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருந்திருக்காது.

மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோதோ, கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்டபோதோ, மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டபோதோ, பர்மாவிலிருந்து தமிழர் விரட்டப்பட்டபோதோ, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்டபோதோ தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை! காரணம் என்ன? திராவிடம் என்ற நச்சு போதைபோல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்!

ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது!

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது!

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது!
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது!

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது! உலகமே இப்படி இருக்கும்போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும்போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?


மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால்தான்! தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்துவிட்டார்கள்.

மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும். இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் இரண்டகராகவோ, எதிரியாகவோத்தான் இருப்பர்.

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை! திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Sunday, March 15, 2009

மனச்சாட்சியும் மண்ணாங்கட்டியும்

கோபம் எல்லாம் உண்மை தெரிந்தும், அதர்மங்கள் நடக்கிறது என்று தெரிந்தும் அதற்க்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனமாக இருக்கும் மனிதர்கள் மீது தான்...... இதுவெல்லாம் துரோகம் இல்லையா? விடுதலை புலிகள் மீது மட்டும் தாக்குதல் நடத்தாமல் தமிழ் மக்கள் மீதும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி கொன்று குவிப்பதை இந்தியா மட்டும் அல்லாமல் ஐ. நா-வும் , மற்ற நாடுகளும் தடுக்காமல் வெறும் அறிக்கை மட்டுமே விட்டு கொண்டு இருப்பது அவர்கலளின் கையாலாகத தன்மையும், உணர்வின்மையுமே காட்டுகிறது. இந்திய தொலைக்காட்சிகளுக்கும், உலக தொலைக்காட்சிகளுக்கும், மற்ற ஊடகங்களுக்கும், இலங்கையில் நடக்கும் கொடுமை பற்றி தெரியவில்லை கண்டு கொள்ள வில்லை. அவர்களுக்கு எங்காவது ஒரு கொலை, எங்காவது ஒரு அரசியில்வாதியின் பேச்சு , இல்லை எதாவது ஒரு நடிகன் நடிகையின் பற்றிய செய்திகளே முதன்மை பெறுகின்றன இது இந்த காலத்தில் நிகலும் கொடுமைகள் அதையும் வாய் பொளந்து விரும்பி பார்க்கும் பொதுமக்களும் காரணம்... வல்லரசுகள் என்று பீற்றிக் கொள்ளும் நாடுகளும் பொத்திக் கொண்டு இருக்கிறது. இந்திய அரசாங்கமும் வெறும் வார்த்தை ஜாலங்களே விட்டு கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு செத்து மடியும் தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இலங்கை ராணுவத்தால் பாதிக்கபட்ட தமிழர்களுக்கு மருந்து பொருள்களையும் , மற்ற உதவிகளையும் செய்கிறது....இது குழந்தையும் கிள்ளி, தொட்டிலும் ஆட்டும் கதை..... தமிழக அரசும், தமிழக காங்கரசும் ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைபட்ட விதமாக நடந்து கொள்கிறார்கள். கண்ணைக் கட்டிக் கொண்டால் உலகம் தெரியாது என்பது போல..இவர்களின் பேச்சும், நடவடிக்கைகளும் யாருக்கும் புரியாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறார்களோ....என்றே தோன்றுகிறது, இல்லை தெரிந்தும் இவர்களிடம் பணமும் அதிகாரமும் இருப்பதால் இப்போதைக்கு மற்றவர்களால் ஒன்றும் செயமுடியாது என்றே நினைக்கிறார்கள்...காலம் தான் இவர்களுக்கு பதில்...சொல்லும். ஆனாலும் தேர்தல் வருவதற்கு முன்னரே மற்றக் கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சினைகளை கையில் எடுத்து இருக்கிறது. அவர்களால் வெறும் கூச்சல்களும் போரட்டங்களும் மட்டுமே நடத்த முடிகிறது.. பிடிக்காதவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்வது கொடுமையிலும் கொடுமை. இலங்கை அரசுக்கு உதவி செய்யும் இந்திய அரசுக்கு பொறுபானவர்களை எந்த சட்டத்தில் கைது செய்வது.... இவர்களுக்கு மொத்ததில் மனச்சாட்சியும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

Sunday, May 6, 2007

நெஞ்சு பொறுக்குதில்லையே

துரோகிகளையும், நயவஞ்கர்களையும்,பாசங்கு செய்பவர்களையும் பார்க்கும் போது - நெஞ்சுப் பொருக்குதில்லையே.

மேலோட்டமாக , வெளிப் புற தோற்றத்தை வைத்து மனிதர்களை எடை போடுபவர்களை, நினைப்பவர்களை பார்க்கும் போது - நெஞ்சுப் பொருக்குதில்லையே.

உண்மை அறியாமல், கொஞம் நம்பிக்கையை வைத்து, அவர்கள் எது செய்தாலும் , நல்லதற்கே செய்வார்கள் என்று நினைப்பவர்களையும், அப்படிபட்டவர்களை ஏமாத்துவர்களையும் பார்க்கும் போது - நெஞ்சுப் பொருக்குதில்லையே.

Friday, April 13, 2007

கேவலமா இருக்கு

ஒரு தனி பட்ட மனிதனை பற்றியது. தனிபட்ட மனிதர்களை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை மனித நாகரிகத்தை நாம் கையில் எடுத்துகொண்டு பேசும்போது ...இருந்தாலும் என் நோக்கம் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவும், புரியாதவர்கள், தெரிந்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் - இது ஒரு செய்தியாகவே இருக்கட்டும் என்று.


இது அட நம்ம ஐஸ் பற்றியும், அபிஷ்சேக் பற்றியும். நிறைய கேள்விகளும் சந்தேகங்கலும் மனதில் எழுகின்றன. ஐஸ் இதற்கு முன்னாடி ரெண்டு மூன்று பேரை காதலித்து... இருக்கிறார் என்று.

இப்படி இருக்கையில், எப்படி அபிசேக் - ஆல் ஒத்து கொள்ள முடிகிறது காதலையும் சரி, கல்யாணமும் சரி. இந்திய மக்களும்(?), ரசிகர்களும், அவர் மீதும், அமிதாப்பச்சன் குடும்பத்தின் மீது வைத்து இருக்கும் மதிப்பு என்ன வாகும்?,

இல்லை வாய் கிழிய பேசும் சிலரின் இந்திய கலாச்சாரம் , பண்பாடு ....என்ன வாகும், அது சரியா.?

இல்லை அபிசேக் மட்டும் என்ன இதற்கு முன்னே யாரையும், "காதலிக்க" வில்லையா? என் கேள்வி எழ தான் செய்கிறது.

இல்லை உண்மையிலேயே ரசிகர்களும் , மற்றவர்களும் இதை பற்றி கவலை படுகிறார்களா?

இந்த காதல் உள்ளங்களின் எண்ணம் தான் என்ன?
-இது என்ன புகழுக்காகவா?
-இல்லை பணத்துக்காகவா
-இல்லை அழகுக்காகவா
-இல்லை ஆசைக்காகவா
-இல்லை இனம் புரியாத உணர்வுகளுக்காகவா?

எது எப்படியாக இருந்தாலும் அவர்களின் முடிவுகள் தனிபட்டவையாக இருந்தாலும் , இப்படி பட்ட சம்பந்தங்கள் சரியாதனவாகவே படவில்லை. இவர்கள் கடந்த காலங்களை பற்றி கவலை பட்டதாக , கணக்கில் எடுத்து கொண்டதாக தெரிய வில்லை. இவர்களை ஒரு உதாரணத்திற்க்கே எடுத்து கொண்டு இருக்கிறேன், இவர்களை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால். இவர்களை போன்று எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். இது எல்லாம் ஒரு பொருட்டாகவே பட வில்லை.

என்னை பொருத்தவரையில் நல்ல கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி, தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி, சில விசயங்கள் தப்பானவைகள் என்றால், தப்பு தான் இந்திய கலாசாரத்தையும், மனித நாகரிக்கத்தையும் மனதில் நினைக்கும் போது.

இங்கு நான் காதல் என்று சொல்லி இருப்பது மரியாதை நிமத்தமாகவே அந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன்.

இதை எல்லாம் சொல்ல எனக்கு கேவலமாக இருக்கிறது. இது எல்லாம் ஒரு பொழப்பா என தோணுது

Saturday, April 7, 2007

என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால்

என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்து இருந்தால், இது தான் செய்து இருப்பேன் இந்த நேரத்தில். உலகம் பூரா உள்ள நியுஸ் பேப்பர்களிலும் வெப்சைட்டுகளிலும் "war against terror". இராகில் நடந்தது "war against terrorist" -ஆ. தன் தகப்பனின் தோழ்விக்கு பலி வாங்க இராக் மீது போரை தொடுத்தார் புஷ். Saddam-ஐ கொல்ல இராக் மக்களை ஏன் கொல்கிறார்கள்?

இராகில் நடந்து வரும் குண்டு வெடிப்புகளும் , கொலைகளும் தீவரவாதிகளாலா நடக்கிறது. websites-ஐ பார்த்தாலும் நியுஸ் பேப்பரை பார்த்தாலும் தீவிரவாதிகள் தாக்குதல்...தீவிரவாதத்தின் எதிரொலி என்று........

இராக்கில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகளுக்கும் , கொலைகளுக்கும் யார் காரணம்..புஷ்-யே காரணம். இப்பொழுது நடைபெறும் சம்பவங்கள்...2003 முன்னர் இல்லையே..

Saddam -கொன்னாச்சு ஆட்சியும் கவழ்த்தாச்சு...இன்னும் என்ன வேலை அமெரிக்காவுக்கு.... அடுத்தவன் வீட்டு சொத்துக்கு ஏன் இப்படி நாக்க தொங்க போட்டு கொண்டு அலையனும் ..அமெரிக்காவிடம் இல்லாத பணமா இல்லாத சொத்தா? ஏன் இந்த அற்ப ஆசை குணம்...அரக்க குணம்.

ஒரு உயிர் போனால் கூட ஊர் உலகம் தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா.....இராகில் தினமும் நூற்றுக்கணக்கான பேரு கொல்ல படுகிறார்களே...அது மனிதாப மானமோ இல்லை மனித நேயமாகவோ தெரிய வில்லையா?

எனக்கு என்னொவொ இராகில் நடைபெறும் எல்லாம் தீவிரவாதமாக தெரியவில்லை...தங்களையும், தன் நாட்டையும் ஆக்கிரமிட்து கொண்டு இருக்கும் அமெரிக்காவின் மீது கொண்ட கோப வெறியே என்று தோன்றுகிறது..

இது என்னொமோ அமெரிக்கவாவின் ஒட்டு மத்த முடிவாகவே தெரியவில்லை...தனி பட்ட ஒரு மனிதனின் எண்ணங்களே இங்கு இராகில் பிரதிபலிக்கின்றன.

என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால் அமெரிக்காவின் பொருளாதரத்துக்கு உலகம் பூரா தடை விதிப்பேன்...இந்த உலகம் இன்னும் 20 வருசம் முன்னால் இருந்த நிலமைக்கு போனாலும் சரி பொருளாதரத்தில்!?. இது புஷ்-ஐ அதிபராக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு கொடுக்க படும் தண்டனை மட்டும் அல்ல கை கட்டி காசுக்கு நம் மீதும் பொருளாதர தடை விதித்து விடுவார்களோ என்று பொத்தி கொண்டு தன் வேலையை மட்டும் நல்ல புள்ளையாக பார்க்கும் மற்ற நாடுகளுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன். இன்னொரு தடவை இது போன்ற தனி விருப்பு வெறுப்பு உள்ள மனிதனை அமெரிக்கா மட்டும் இல்லை (இராக்கும் தான்), எந்த நாட்டு மக்களும் அப்படி பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்க கூடாது.

இதனால் ஒரு புதுசாய் ஆக்கிரமிப்பு இல்லதா உலகத்தை படைக்க வழி வகுப்பேன்...எனக்கு இல்லாத இந்த அதிகாரம் இந்த உலகில் இப்போது யாருக்கு இருக்கிறது?